கோரக்பூர்: உபி மாநிலம் கோரக்பூர் கோயிலில், போலீஸ்காரர்களை அரிவாளால் தாக்கிய ஐஐடி பட்டதாரி கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் பிரசித்தி பெற்ற கோரக்நாத் கோயில் உள்ளது. கோயிலின் தலைமை பூசாரியாக உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் இருப்பதால், கோயிலை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு இருக்கும். இந்நிலையில், நேற்று கோயிலை நோக்கி இளைஞர் ஒருவர் ஓடிச் சென்றார். கோயிலுக்குள் நுழைய முயன்ற அவரை அங்கிருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அரிவாளை எடுத்த அந்த நபர் போலீஸாரை தாக்கினார்.