மாஸ்கோ : ரஷ்யா தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்தும் பணிகளை உக்ரைன் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, ஒரு மாதத்திற்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. கீவ், இர்பின் உள்ளிட்ட நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கார்க்கிவ் நகரில் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யாவால் அடுக்குமாடி குடியிருப்புகள் தரைமட்டமாகின. எரிவாயு குழாய்கள் சேதம் ஆகின. ஏராளமான கடைகள் எரிந்து நாசமாகின. மரியுபோல் நகரில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளதால் அங்கிருந்து மக்கள் செஞ்சிலுவை சங்கத்தினரின் உதவியுடன் 45 பேருந்துகளில் வெளியேற்றப்பட்டனர்.