குன்னூர்: குன்னூரில் முகாமிட்டுள்ள யானைகள் தனியார் ஸ்ட்ராபெர்ரி தோட்டத்திற்குள் புகுந்து அங்கிருந்த பழங்கள் மற்றும் வாழை மரங்களை தின்று சென்றன. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சுற்றப்புற பகுதிகளில் இருந்து யானைகள் உணவு மற்றும் தண்ணீருக்காக நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு படையெடுத்துள்ளன. கடந்த ஒரு வாரமாக குன்னூர் காட்டேரி பூங்கா அருகே உள்ள கிளண்டேல் தேயிலை தோட்டம் அருகில் 9 யானைகள் முகாமிட்டுள்ளன. இதனை சுற்றியுள்ள கிராமத்திற்குள் யானைகள் வராமல் இருக்க வனத்துறை சார்பில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.