சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. ஆண்டுதோறும் தீபாவளி முடிந்த 10 நாட்களில் அடுத்த ஆண்டுக்கான உற்பத்தி தொடங்கும். பட்டாசு தயாரிக்க பேரியம் நைட்ரேட் கெமிக்கல் பயன்படுத்தவும், சரவெடி தயாரிக்கவும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையடுத்து ஆலைகளில் பிஜிலி வெடி, லட்சுமி வெடி, அணுகுண்டு மற்றும் பச்சை உப்பு அல்லாத மற்ற வெடிகள் மட்டும் தயாரித்து வந்தனர். இதனால் 60 சதவீத தயாரிப்பு பணி மட்டும் நடைபெற்றது. பட்டாசு ஆலைகளில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பட்டாசு தயாரிக்க வேண்டும். தடையை மீறும் ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் எச்சரித்தனர்.