போடி: போடி பஸ்நிலயத்தில், குடிநீர் சுத்திகரிப்பு மையம் பயன்பாடின்றி பூட்டு போடப்பட்டுள்ளது. வெயில் கொளுத்தும் நிலையில், சுத்திகரிப்பு மையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை விடுத்துள்ளனர். போடி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த நகரைச் சுற்றியுள்ள 15 கிராம ஊராட்சிகளில், 40க்கும் மேற்பட்ட கிராமங்களும், போடிமெட்டு, குரங்கணி, வடக்குமலை ஆகிய பகுதிகளில் மலைக்கிராமங்களும் உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் தேவையான பொருட்களை வாங்க, போடிக்கு வந்து செல்கின்றனர். இதனால், பஸ்நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.