திருவள்ளூர்: திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பேருந்து பூண்டி வழியாக பென்னலூர்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த அரசு பஸ் பூண்டி பஸ் நிலையம் அருகே வந்தபோது அந்த பஸ்சில் பள்ளி மாணவர்கள் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் படிக்கட்டுகளில் ஆபத்தான நிலையில் தொங்கியபடி பயணம் செய்துகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் உடனடியாக தனது காரை விட்டு கீழே இறங்கி அரசு பஸ்சை நிறுத்துமாறு சைகை காட்டினார். இதனைத்தொடர்ந்து அந்த பஸ்சின் டிரைவர் வண்டியை நிறுத்தி பஸ் படிக்கட்டில் ஆபத்தான நிலையில் தொங்கி வந்த மாணவர்களிடம் இதுபோன்று ஆபத்தான செயல்களில் ஈடுபடக்கூடாது. அனைவரும் பஸ்சின் உள்ளே சென்று பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என அறிவுரை கூறினார்.