கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம் மூலம் நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள அறிக்கை. கிறிஸ்துவ சமுதாயத்தை சார்ந்த ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள மகளிருக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தி, அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம் பதிவு செய்யப்பட்டு, செயல்படுகிறது.

இச்சங்கத்தின் மூலம், ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள கிறிஸ்துவ மகளிரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், சிறுதொழில் புரியவும், மருத்துவ  உதவி மற்றும் கல்வி உதவித்தொகை வழங்குதல்,  சுயதொழில் செய்ய பயிற்சி அளித்தல் உள்பட பல்வேறு  நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த உதவி பெற விரும்புவோர், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி மனு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: