குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்: திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன் உறுதி

சென்னை: சென்னை மாநகராட்சி 141வது வார்டு திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன் நேற்று குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளான காமராஜர் காலனி, லலிதாபுரம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெண்கள் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர். அப்போது அவர் பேசுகையில், ‘‘இந்த பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் புதிதாக சுமார் 430 சதுரடியில் வீடுகள் கட்டித்தரப்படும், பெண்களுக்கு வேலை வாய்ப்பு மையம், முதியோர்களுக்கு இலவச யோகா மற்றும் தியான பயிற்சி மையம் அமைப்பேன். மக்களோடு மாமன்ற உறுப்பினர் என்ற திட்டம் மூலம் அடிப்படை பிரச்னைகளை உடனுக்குடன் தீர்ப்பேன்,’’ என்றார்.

அப்போது பொதுமக்கள், ‘‘கொரோனா பேரிடர் காலத்தில் உங்களது தந்தை ஜெ.அன்பழகன் இந்த பகுதி மக்களுக்கு செய்த உதவிகளை நாங்கள் மறக்க மாட்டோம். திமுக ஆட்சியின் நல்ல திட்டங்கள் தொடர நாங்கள் உங்களுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களிப்போம், என தங்களது ஆதரவை தெரிவித்தனர். வாக்கு சேகரிப்பின்போது, கோ.உதயசூரியன், ஆ.ஏழுமலை, வட்ட செயலாளர்கள் எஸ்.லட்சுமிகாந்தன், வி.கே.மணிகண்டன், மாவட்ட பிரதிநிதிகள் ஜெ.ஜானகிராமன், எல்.வீரப்பன், எஸ்.ராமலிங்கம், எல்.குமரன், ரா.கர்ணா, வழக்கறிஞர் ஜெயவேல், லயன் சக்திவேல் மற்றும் திமுக நிர்வாகிகள்,  கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

Related Stories: