சென்னை: சென்னை மாநகராட்சி 141வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் ராஜா அன்பழகன் தினசரி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று சிஐடி நகர், ஒய்எம்சிஏ பள்ளிவாசல் மற்றும் சிஐடி நகர் பிரதான சாலையில் உள்ள தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு, இஸ்லாமியர்கள் உற்சாக வரவேற்பளித்து, ஆதரவு தெரிவித்தனர். அப்போது அவர், சிறுபான்மையினர் நலன் காக்க திமுக அரசு செய்த சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை எடுத்து கூறி ஆதரவு திரட்டினார். மேலும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.