டெல்லி: முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாமல் அணையை ஆய்வு செய்யக்கூடாது என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. ஜூன் மாதம் பருவமழை தொடங்கும் முன் பராமரிப்பு பணிகளை முடிக்க வேண்டும். பராமரிப்பு பணிகளுக்கு கேரள அரசு ஒத்துழைக்கும் படி கேரளா அரசுக்கு உத்தரவிட தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.
அந்த மனுவிற்கு தான் தற்போது தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. தற்போதைய சூழலில் பராமரிப்பு பணியை மேற்ற்கொள்ள முடியாத நிலை உள்ளது. பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கேரள அரசு ஒத்துழைப்பு தர மறுத்துள்ளது. குறிப்பாக முல்லை பெரியாறு அணையை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் மரங்கள் உள்ளது, அதனை வெட்டுவதற்க்கோ, அல்லது சாலைகளை செப்பணிடவோ கேரள அரசு அனுமதி வழங்க மறுத்துள்ளது. அதுமட்டுமின்றி முல்லை பெரியாறு அணையின் பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியாத ஒரு சூழல் உள்ளது. எனவே இந்த பராமரிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த பிறகுதான் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும், இந்த பராமரிப்பு பணிகள் ஜூன் மாதத்திற்கு முன்பு முடிக்கப்பட வேண்டும். அதற்க்கு கேரள அரசு தமிழக அதிகாரிகளை அனுமதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை அணையில் ஆய்வு மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என கோரி தமிழக அரசு தனது பதில்மனுவை தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவானது அடுத்த வாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.