தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் இயக்கம்: மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தகவல்

சென்னை: பச்சை வழித்தடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்ட மெட்ரோ ரயில் சேவை மீண்டும் இயக்கம் என மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மக்களுக்கு மெட்ரோ ரயில் போக்குவரத்து மிக முக்கிய போக்குவரத்தாக உள்ளது. இந்நிலையில் மீனம்பாக்கம் மற்றும் விமான நிலையம் இடையே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை சென்ட்ரல் – விமான நிலையம் இடையே நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனவே பயணிகள் விமான நிலையம் செல்ல ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் சென்று அங்கிருந்து பச்சை வழித்தடத்தில் மாறி பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விம்கோ நகர் முதல் விமான நிலையம், சென்னை சென்ட்ரல் – பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவசரகால பராமரிப்பு பணி காரணமாக சென்ட்ரல் மெட்ரோ மற்றும் விமான நிலையம் இடையேயான நேரடி மெட்ரோ ரயில்கள் இன்றைய தினம் ரத்து செய்யப்பட்டுள்ளன. பச்சை லைன் வழியாக விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து செல்ல வேண்டும். நீலநிற லைன் (விம்கோ நகர் டிப்போ முதல் விமான நிலையம் வரை) மற்றும் பச்சை லைனில் மெட்ரோ ரயில் சேவைகள் (சென்ட்ரல் மெட்ரோ முதல் சென்ட் தாமஸ் மவுண்ட் வரை) வார நாள் அட்டவணைப்படி வழக்கம் போல் செயல்படும்.

இந்த சிரமத்திற்கு வருந்துகிறோம்” என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதனை தொடர்ந்து 7 மணி நேரத்திற்கு பின் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டுள்ளது மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் அதிகாரி கூறியதாவது : மீனம்பாக்கம் மற்றும் விமான நிலையம் இடையே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு 7 மணி நேரத்திற்கு பிறகு சரி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சென்ட்ரல் மெட்ரோ மற்றும் விமான நிலையம் இடையேயான நேரடி மெட்ரோ ரயில்கள் மீண்டும் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் இயக்கம்: மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: