இந்த நிலையில், மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபாய் எஸ் ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆஜரான செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், “செந்தில் பாலாஜிக்கு ஏற்கனவே பைபாஸ் சர்ஜெரி செய்யப்பட்டுள்ளது. 330 நாட்களுக்கு மேலாக அவர் சிறையில் உள்ளார். அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “330 நாட்கள் சிறையில் உள்ளார் என்பதை ஒரு காரணமாக சொல்ல முடியாது. பல விசாரணை கைதிகள் 2 , 3 ஆண்டுகள் சிறையில் உள்ளனர்.,”என்றார். தொடர்ந்து அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
The post 330 நாட்கள் சிறையில் உள்ளார் என்பதை ஒரு காரணமாக சொல்ல முடியாது : ஜாமீன் கேட்ட செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த நீதிபதிகள் appeared first on Dinakaran.