பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே அரசமலையில் பனை விதை மேம்பாட்டு இயக்கம் வேளாண் இணை இயக்குனர் தொடங்கி வைத்தார்.பொன்னமராவதி வட்டாரத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி இயக்கத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசமலை ஊராட்சியில் பனை விதை மேம்பாட்டு திட்டத்தினை புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குனர் சிவகுமார் தொடங்கி வைத்தார்.சாத்தனூர் கண்மாயில் பனை விதைகள் விதைக்கப்பட்டன. ஊராட்சித்தலைவர் பழனிவேல் முன்னின்று நடத்திக் கொடுத்தார். வேளாண் இணை இயக்குனர் விவசாயிகளிடம் பேசுகையில், பனை மரம் நமது நாட்டின் சின்னமாகும் பனை மரங்களை அழிவிலிருந்து காப்பதற்காக வேளாண்மை உழவர் நலத்துறை பனை மேம்பாட்டு இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது. வரப்பு ஓரங்களிலும், நீர்நிலைகளிலும், தரிசு நிலங்களிலும் விதைப்பதால் பனைமரத்தின் வேர்கள் பரவிச் சென்று நீரை ஈர்ப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.