பொன்னை: பொன்னை அருகே குடிநீர் பிரச்னையை தீர்கக் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னை அடுத்த வெப்பாலை ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இப்பகுதியில் குடிநீர் குழாய்களில் தண்ணீர் வருவதில்லை என கூறப்படுகிறது. இதனால், பெண்கள் குடிநீருக்காக பல கி.மீட்டர் தூரம் சென்று விவசாய கிணறுகள் மற்றும் கால்வாய்களில் குடங்களில் குடிநீர் கொண்டு வருகின்றனர்.