காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகளுடன் உள்ளன. இங்கு முதல்முறையாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலராக மாநகராட்சி ஆணையர் நாராயணன், உதவி தேர்தல் அலுவலர்கள் 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், வேட்புமனு தாக்கல் செய்யும் அறை, மாநகராட்சி அலுவலகம் முழுவதும் சிசிடிவி பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. இதையொட்டி, மாநகராட்சி அலுவலகத்தில் வழிகாட்டி நெறிமுறைகள் கடைபிடித்து, போலீசாரின் சோதனைக்கு பின்னர், வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.