தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை இளைய முதலி தெருவில் நேற்று முன்தினம் மாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியே பைக்கில் வந்த இருவரை நிறுத்தி, சந்தேகத்தின் பேரில், அவர்களது பைக்கை சோதனை செய்தபோது அதில் 4 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர்கள், வியாசர்பாடி தாமோதரன் நகரை சேர்ந்த தினகர ராஜா (27), அவரது மனைவி பிரியா (26) என்பது தெரியவந்தது.