அரியலூர்: அரியலூர் மாணவியின் தற்கொலை சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் மாணவிக்கு சித்தி கொடுமை இருந்ததாக ஏற்கெனவே தொலைபேசியில் புகார் வந்திருப்பதாக புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. தஞ்சை தனியார் பள்ளியில் தங்கி படித்து வந்த அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், பள்ளி விடுதி காப்பாளர் மீது புகார் கூறப்படுகிறது. மேலும் மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் மாணவிக்கு சித்தி கொடுமை இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் சித்தி கொடுமை என சைல்டு லைன் எண்ணுக்கு மாணவியிடம் இருந்து அழைப்பு வந்ததாகவும், விசாரணைக்கு சென்ற போது சித்தி கொடுமை இல்லை என மாணவி மறுத்ததாகவும் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் கூறியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.