சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: விருதுநகரில் ஒரே மாதத்தில் 5-வது முறையாக வெடி விபத்து

விருதுநகர்: சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு தயாரிப்பதற்கான ரசாயன மூலப்பொருள் அறையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின. காலை நேரத்தில் வெடி விபத்து ஏற்பட்டபோது தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராததால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்க்கபட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் இந்த மாதத்தில் மட்டும் 5-வது முறையாக பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வெப்ப அலை நிலவுவதால் பட்டாசு தொழிற்சாலைகளில் உற்பத்தி நேரத்தை குறைக்கவும், தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வலியுறுத்தியுள்ளார்.

The post சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: விருதுநகரில் ஒரே மாதத்தில் 5-வது முறையாக வெடி விபத்து appeared first on Dinakaran.

Related Stories: