சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து

விருதுநகர்: சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு தயாரிப்பதற்கான ரசாயன மூலப்பொருள் அறையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின. காலை நேரத்தில் வெடி விபத்து ஏற்பட்டபோது தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராததால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்க்கபட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் இந்த மாதத்தில் மட்டும் 5-வது முறையாக பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

The post சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து appeared first on Dinakaran.

Related Stories: