மும்பை: மும்பை உயர் நீதிமன்ற வளாகத்தின் தரை தளத்தில் உள்ள நீதிபதியின் அறையில் பதுங்கியிருந்த 6 அடி நீளமுள்ள பாம்பு பிடிபட்டது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை உயர் நீதிமன்ற வளாகத்தின் தரை தளத்தில் உள்ள நீதிபதி அமித் போர்க்கரின் தனி அறையில் 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. இதையறிந்த நீதிமன்ற ஊழியர்கள் அந்த பாம்பை பிடித்து அப்புறப்படுத்தினர். இதுகுறித்து நீதிமன்ற ஊழியர்கள் கூறுகையில், ‘நீதிபதியின் அறையில் பதுங்கியிருந்த பாம்பு விஷமுள்ளதா? என்பது தெரியவில்லை. அந்த பாம்பை பிடிப்பதற்காக பாம்பு பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் நீதிபதியின் அறையில் இருந்த பாம்பை பிடித்து சென்றனர்.