புதுடெல்லி: நாட்டில் அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சுக்களை பேசுவோர் விவகாரத்தில் ஆளும் பாஜ கட்சி மௌனம் காப்பது மட்டுமல்லாமல், அவற்றை ஆதரிக்கவும் செய்கிறது என பிரபல உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் கடுமையாக விமர்சித்துள்ளார். மும்பையில் சட்டப் பள்ளி தொடக்க விழா ஒன்றில் ஜனவரி 14 அன்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி நாரிமன் கலந்து கொண்டு பேசினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ஆளும் அரசாங்கத்தை விமர்சிப்பதற்காக ,ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான வேறுபாட்டைக் கொண்ட சட்டப்பிரிவு 19 வது பிரிவின் நோக்கத்தை முற்றிலுமாக மீறி, நகைச்சுவை நடிகர்கள் மற்றும் மாணவர்கள் மீது தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.