சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல், தரமற்ற பொருள் வழங்கியதாக ஈபிஎஸ் கூறுவது அப்பட்டமான பொய் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார். குறுகிய காலத்தில் 2.5 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 வகையான பொருட்கள் தரமாக வழங்க உரிய விலை புள்ளி கோரப்பட்டது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிக்கு சக்கரபாணி பதிலளித்துள்ளார்.