புதுடெல்லி: நாட்டில் முதன்முறையாக குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்க ஆட்டோ டிரைவர்கள், கட்டிட தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி கூறியதாவது: ‘குடியரசு தினவிழா கொண்டாட்டம் டெல்லி ராஜ்பாத்தில் ஜன.26ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக வெளிநாட்டு தலைவர்கள் யாரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கவில்லை. மேலும், 8 ஆயிரம் பார்வையாளர்ளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன் முறையாக, ஆட்டோ டிரைவர்கள், துப்புரவாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோரை பிரதமர் மோடியின் உத்தரவுப்படி குடியரசு தினவிழா கொண்டாட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம்’. இவ்வாறு அவர் கூறினார்.