கர்நாடகா: கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 21,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 14,473 பேருக்கு கர்நாடகாவில் உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது 21 ஆயிரம் பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு நகரில் மட்டும் 15,617 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று 10,800 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று மேலும் 10 பேர் உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,541 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மாநிலத்தில் தற்போது கொரோனா பாதிப்புடன் 93,009 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.