மும்பை: ஐபிஎல் தொடரில் பங்கேற்க லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகளுக்கு பிசிசிஐ முறையான அனுமதி வழங்கியுள்ளது. இரு அணிகளுக்கும் தங்களின் வரைவுத் தேர்வுகளை இறுதி செய்ய இரண்டு வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் ஏலம் பிப்ரவரி 12 மற்றும் பிப்ரவரி 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெறும் என ஐபிஎல் தலைவர் தகவல் தெரிவித்தார்.