புரோ கபடி லீக் போட்டியில் இன்று அரியானா டீலர்ஸ்-மும்பை யு.பி.யோத்தா-தமிழ் தலைவாஸ் மோதல்

பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 27வது லீக் ஆட்டத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்கால் வாரியர்ஸ் அணியும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் மோதின. தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு அணி வீரர்களும் வெற்றிக்காக கடும் பிரயத்தனம் செய்தனர். இருப்பினும் நடப்பு சாம்பியன் பெங்கால் வாரியர்ஸ் அணி 31-28 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி 3-வது வெற்றியை ருசித்தது.

இதைத்தொடர்ந்து 2வது போட்டியில் பாட்னா பைரட்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதியது. இதில் வெற்றிபெற்றே தீரவேண்டும் என்ற வெறியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி ஆடியது. நிமிடத்திற்கு நிமிடம் ஆட்டம் ரசிகர்களை பரபரப்புக்குள்ளாக்கியது. வெற்றிபெற வேண்டிய நிலையில் இருந்த தெலுங்கு டைட்டன்ஸ் அணியை தங்களது திறமையான ஆட்டத்தின் மூலம் பாட்னா பைரட்ஸ் அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் வீழ்த்தியது. பாட்னா அணிக்கு இது 4-வது வெற்றி ஆகும். அந்த அணியின் சச்சின் முக்கிய கட்டங்களில் புள்ளிகளை எடுத்ததால் வெற்றி வசமானது. இன்று இரவு 7.30 மணிக்கு அரியானா ஸ்டீலர்ஸ்-மும்பை அணிகளும், 8.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் உ.பி.யோத்தா-தமிழ் தலைவாஸ் அணிகள் சந்திக்கின்றன.

Related Stories: