தண்டையார்பேட்டை, ஜன.2: காசிமேடு சிங்கார வேலன் நகரை சேர்ந்த 15 வயது சிறுமி பெற்றோருடன் வசிக்கிறாள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானாள். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பல இடங்களில் தேடினர். எந்த தகவலும் இல்லை. இதனால் காசிமேடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென சிறுமி வீட்டுக்கு வந்தாள். மகளை பார்த்ததும் பெற்றோர் மகிழ்ச்சியடைந்தாலும் கோபமும் ஏற்பட்டது.