திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாலிவுட் நடிகை ஜான்விகபூர் சுவாமி தரிசனம் செய்தார்.சித்தூர் மாவட்டம், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பாலிவுட் நடிகை ஜான்விகபூர் நேற்று முன்தினம் திருமலைக்கு வந்தார். இந்நிலையில், நேற்று காலை விஐபி தரிசனத்தில் அவர் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் அதிகாரிகள் லட்டு உள்ளிட்ட தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். கோயிலுக்கு வெளியே வந்தபோது நடிகை ஜான்வியை பார்த்த அவரது ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.