பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நேற்று தொடங்கியது. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும். நேற்று நடந்த முதல் போட்டியில் யு மும்பா-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. இதில் யு மும்பா 46-30 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. தொடர்ந்து நடந்த 2வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் 23-21 என முன்னிலை பெற்றது. 2வது பாதியில் தமிழ்தலைவாஸ் ஒருகட்டத்தில், 9 புள்ளி அதிகம் பெற்று வெற்றி வாய்ப்பில் இருந்தது. ஆனால் கடைசி 2 நிமிடத்தில் ஆட்டம் தலைகீழாக மாறியது. தொடர்ச்சியாக 8 புள்ளிகளை சேர்த்த தெலுங்கு 40-40 என ஆட்டத்தை டையில் முடித்தது.