பெங்களூரு : மேகதாதுவில் அணை கட்டுவதற்கான அனுமதியை எதிர்வரும் 27ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் வழங்கும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். பெலகாவியில் நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் இந்த தகவலை பசவராஜ் பொம்மை கூறி இருக்கிறார். மேகதாதுவில் அணை கட்டுவது எப்போது சுயேச்சை எம்எல்ஏ ஷரத் பச்சே கவுடா கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் 67.16 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணை விரைவில் கட்டப்படும் என்றார்.