லண்டன்: சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை பெலிண்டா பென்சிக். 24 வயதான இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார். கடந்த வாரம் முபதாலா உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் கண்காட்சி போட்டியில் பங்கேற்க அபுதாபிக்கு சென்றிருந்தார். அதன்பின்னர் நாடு திரும்பிய நிலையில், அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. கடுமையான காய்ச்சல், தலைவலியால் அவதிப்பட்ட அவருக்கு பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், துரதிர்ஷ்டவசமாக, நான் முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தாலும், சமீபத்தில் கோவிட்-19 சோதனை செய்ததில் பாசிட்டிவ் வந்துள்ளது.