சிறுபான்மையினருக்கு எல்லா வகையான ஏற்றங்களும் தரும் ஆட்சியாக திமுகவின் அரசு உள்ளது; கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சிறுபான்மையின மக்களுக்கு என்றும் துணையாக திமுக அரசு உள்ளது என கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சிறுபான்மையினர் ஏற்றம் பெறக்கூடிய காலமான திமுக ஆட்சி காலம் தொடங்கியுள்ளது. நாம் மொழியாலும் இனத்தாலும் தமிழர்கள். வழிபாடு என்பது அவரவர் விருப்பம். 5 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனையை 5 மாதங்களில் செய்துள்ளோம். 300க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில், சாந்தோம் மேல்நிலை பள்ளியில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதல்வர் மு.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்வில் பேசிய அவர், இது எனது மனதிற்கு நெருக்கமான விழா, அனைத்து மதங்களும் அன்பையே பொத்திகின்றன. அன்பின் வெளிப்பாடாகவே நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.  

சிறுபான்மையினருக்கு எல்லா வகையான ஏற்றங்களும் தரும் ஆட்சியாக திமுகவின் அரசு உள்ளது. நாம் மொழியால், இனத்தால் தமிழர்கள்; வழிபாடு என்பது அவரவர்களின் விருப்பம். அரசு மட்டுமே மக்களுக்கான அனைத்தையும் வழங்கிவிட முடியாது. இயக்கங்களின் ஒத்துழைப்பும் தேவை என்றும், தேர்தலின் போது, திமுக அளித்த 500 வாக்குறுதிகளில், 300-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories: