செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த கோவிலூர் கிராமத்தில் ஏரிகண்மாய் அருகில் ஆங்கிலேயர் கால பொதுப்பணித்துறை பயணியர் தங்கும் பங்களா பாழடைந்த நிலையில் உள்ளது. இதன் நுழைவு வாயில் எதிரே சிதைந்த நிலையில் கி.பி. 19ம் நூற்றாண்டை சேர்ந்த சுமைதாங்கி கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, வரலாற்று ஆய்வாளர் எறும்பூர் செல்வகுமார் கூறியதாவது: நெடுந்தூரம் கால்நடையாய் பயணிக்கும் நபர்கள் தலைச்சுமையை இறக்கி சுமைதாங்கி கல்லின் மீது வைத்துவிட்டு சற்று இளைப்பாறி பயணத்தை மீண்டும் தொடர்வார்கள். அந்த வகையில் சுமைத்தாங்கி கல்லை கொடையாக நிறுவி, அதில் அவர்களின் ஊரும், பெயரும் செதுக்கி வைத்துள்ளனர்.