திருவனந்தபுரம்: விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரின் எலைட்-பி பிரிவில் உள்ள கர்நாடகா-தமிழ்நாடு அணிகள் நேற்று மோதின.திருவனந்தபுரத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கர்நாடகம் முதலில் களமிறங்கியது. தமிழக அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. சமாளித்து நின்று விளையாடி கேப்டன் மனீஷ் பாண்டே 40, ரோகன் கடாம் 37 ரன் எடுத்தனர். அதனால் ஸ்கோர் 100யை கடந்தது. ஆனால் மற்றவர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேற கர்நாடகம் 36.3ஓவரில் எல்லா விக்கெட்களையும் இழந்து 122ரன் எடுத்தது. தமிழ்நாடு தரப்பில் மணிமாறன் சித்தார்த் 4, ரவி சாய்கிஷோர் 3 விக்கெட்களை அள்ள, ரகுபதி சிலம்பரசன், வாஷிங்டன் சுந்தர், சந்தீப் வாரியர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.