திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல பூஜை வரும் 26ம் தேதி நிறைவடைய இருப்பதால் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்துள்ளனர். சுமார் 3 மணி நேரத்தில் 10,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை மண்டல மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 15ம் தேதி திறக்கப்பட்டு 16ம் தேதி முதல் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. வரும் 26ம் தேதி நடை அடைக்கப்பட உள்ள நிலையில், காலை முதல் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.