பாட்னா : சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை கொண்டு வருவதற்காக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தீவிரம் காட்டி வருகிறார்.இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சிகள் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி வருகின்றனர்.கொரோனா காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், எஸ்சி/எஸ்டி பிரிவை தவிர, மற்ற பிரிவுகளுக்கு சாதி அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில்லை என்று கடந்த மாதம் ஒன்றிய அரசு விளக்கம் அளித்தது.