புதுடெல்லி: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ரஜன்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்தியாவில் உள்ள புனித தலங்கள் மற்றும் உறவினர்களை சந்திப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்துள்ளனர். பின்னர் அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப முயன்றுள்ளனர். ஆனால் இந்தியா- பாகிஸ்தானின் எல்லையான அட்டாரியில், போதுமான ஆவணங்கள் இல்லை என்று கூறி பாகிஸ்தான் அதிகாரிகள் அவர்களுக்கு அனுமதி மறுத்துவிட்டதாக தெரிகின்றது. இதன் காரணமாக கடந்த 70 நாட்களாக இவர்கள் அட்டாரி எல்லையில் தங்கியிருக்கின்றனர். இவர்களில் 47 பேர் சிறுவர்கள். அவர்களில் 6 பேர் இந்தியாவில் பிறந்தவர்கள். ஒரு வயது நிறைவடையாதவர்கள்.