திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் ஆன் லைனில் முன்பதிவு செய்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். முதலில் தினசரி 25 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. பக்தர்கள் கோரிக்கையை ஏற்று தற்போது தினசரி 50 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிப்படுகின்றனர். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்றுமுன்தினம் முதலாவதாக 50 ஆயிரம் பக்தர்கள் வந்தனர். அவர்கள் சன்னிதானத்தை சுற்றியுள்ள வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர்.