சென்னை: தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்கும் வகையில் அனைத்து கட்சிகளும் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று வருகின்றன. அதே நேரத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று விஜயகாந்த் அதிரடியாக அறிவித்தார். தொடர்ந்து தேமுதிக சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளும், தொண்டர்களும் 7ம் தேதி (நாளை) வரை அந்தந்த, மாவட்ட தலைமை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.