பெங்களூரு: கர்நாடக மாநிலம் மைசூரில் 35 ஆண்டுகளுக்கு பிறகு முதியவர் ஒருவர் காதலியை கரம் பிடித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மைசூர் அருகே ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த சிக்கண்ணா என்ற முதியவரும், ஜெயம்மா என்பவரும் இளம் வயதில் காதலித்துள்ளார்கள். ஆனால் ஜெயம்மாவின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் பிரியும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஜெயம்மாவை அவரது குடும்பத்தினர் வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான 4 ஆண்டுகளில் ஜெயம்மா கணவரை பிரிந்து வாழ்ந்துள்ளார்.