பாஜ விழிப்புணர்வு

திருவள்ளூர்: திருவள்ளூரில் மேற்கு மாவட்ட பாஜ கல்விசார் பிரிவு சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்ககோரி துண்டு பிரசுரம் வழங்கும் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்விசார் பிரிவு மாவட்ட தலைவர் லட்சுமிகாந்தன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் கீதாஞ்சலி தாமோதரன், சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியை மாவட்ட பாஜ தலைவர் ராஜ்குமார் தொடங்கி வைத்தார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கீதாஞ்சலி சம்பத், மாவட்ட நிர்வாகிகள் அஸ்வின் (எ) ராஜசிம்மன் மகேந்திரவர்மன், லயன் சீனிவாசன், மதுசூதனன், ஆற்காடுகுப்பம் சரவணன், பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: