திருவள்ளூர்: திருவள்ளூரில் மேற்கு மாவட்ட பாஜ கல்விசார் பிரிவு சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்ககோரி துண்டு பிரசுரம் வழங்கும் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்விசார் பிரிவு மாவட்ட தலைவர் லட்சுமிகாந்தன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் கீதாஞ்சலி தாமோதரன், சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.