டெல்லி: விவசாயிகள் போராட்டத்தின் போது உயிர் தியாகம் செய்த 700 விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காதது ஏன்? எனவும் ராகுல் காந்தி வினவியிருக்கிறார். போராட்டக் களத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு இழப்பீடு தரும் திட்டம் இல்லை என்பதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.