புதுடெல்லி: ‘ஒன்றிய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டதும், நாடாளுமன்றத்தில் கிரிப்டோ கரன்சி மசோதா தாக்கல் செய்யப்படும்,’ என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ‘எந்தவொரு மாநிலத்தின் வருவாய் வளர்ச்சி விகிதமும் எதிர்பார்த்தபடி 14 சதவீதத்தை எட்டவில்லை என்பதால், 2022ம் ஆண்டு வரை ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் திட்டம் எதுவும் ஒன்றிய அரசிடம் இருக்கிறதா?’ என்று மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், `சட்டத்தில் கூறியுள்ளபடி, ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டதால் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்புக்கு 5 ஆண்டுகள் மட்டுமே இழப்பீடு வழங்க ஒன்றிய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதை முழுவதுமாக வழங்க அரசு உறுதி பூண்டுள்ளது,’ என்று தெரிவித்துள்ளார்.