ஒசூர்: ஒசூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 43 சவரன் நகைகள், ரூ.2.75 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. உப்கார் லேஅவுட் குடியிருப்பில் வசிக்கும் பாஸ்கர், தனது குடும்பத்துடன் வெளியூர் சென்ற நிலையில் கொள்ளை நிகழ்ந்துள்ளது. கொள்ளை குறித்து பாஸ்கர் அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.