புதுடெல்லி: சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக், பாகிஸ்தானின் கர்தார்பூரில் தனது கடைசி நாட்களை கழித்தாக கூறப்படுகின்றது. அவரது நினைவாக அங்கு தர்பார் சாஹிப் என்ற பெயரில் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது. இந்த குருத்வாராவிற்கு சென்று பிரார்த்திப்பது சீக்கியர்களின் புனித கடமைகளுள் ஒன்றாக கருதப்படுகின்றது. பஞ்சாப்பின் குருதாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து கர்தார்பூர் குருத்வாராவிற்கு செல்லும் வழித்தடமானது கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த ஓராண்டாக மூடப்பட்டு இருந்தது.