ஆந்திரா: ஆந்திராவில் நின்று கொண்டிருந்த லாரி மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானது. பிரகாசம் மாவட்டம் கனிகிரியிலிருந்து நெல்லூர் சென்ற பேருந்து சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. லாரி மீது பஸ் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.