போபால்: நோய் பாதிப்புகள், விபத்தில் காயமடைவது போன்றவற்றால் பாதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சை அளிக்க, ‘108 ஆம்புலன்ஸ்’ சேவை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஒன்றிய அரசின் நிதியில், மாநில அரசுகள் இந்த சேவையை அமல்படுத்தி வருகின்றன. இந்நிலையில், மனிதர்களே போலவே நோய்களால் அவதிப்படும் கால்நடைகளுக்கும் உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக, ‘109 ஆம்புலன்ஸ்’ சேவை திட்டத்தை அமல்படுத்த, மத்திய பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.
இம்மாநில தலைநகர் போபாலில், ‘இந்திய கால்நடை சங்கம்’ சார்பாக பெண் கால்நடை மருத்துவர்களுக்கான, ‘சக்தி-2021’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது.