கோவை: கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்த வழக்கில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளி இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி போக்சோவில் கைதான நிலையில் பள்ளி முதல்வர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. சின்மயா பள்ளி முதல்வரை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் அளித்துள்ளனர்.