ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி தமிழ்வாணன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

 

சென்னை: ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி தமிழ்வாணன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆதி திராவிடர், பழங்குடியினர் ஆணைய தலைவர் தமிழ்வாணன் மறைவு செய்தி அறிந்து வருந்தினேன். நீதி வழங்கும் பணியிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை காக்கும் பணியிலும் திறம்பட செயல்பட்டவர். நீதியரசர் தமிழ்வாணனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்

Related Stories: