போபால்: மத்தியபிரதேசத்தை சேர்ந்த ஆளுங்கட்சி பாஜக எம்எல்ஏ ஒருவர், கலெக்டர் முகாம் அலுவலகம் முன் திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய பிரதேச மாநிலம் சந்த்லா தொகுதி ஆளும் பாஜக எம்எல்ஏ ராஜேஷ் பிரஜாபதி, புர்ஹான்பூர் கலெக்டர் ஷிலேந்திர சிங்கின் அதிகாரப்பூர்வ முகாம் அலுவலகம் முன்பாக நேற்று மாலை திடீர் தர்ணா போராட்டம் நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், ‘மாவட்ட அதிகாரிகள் மக்கள் பிரச்னைகள் குறித்து கேட்பதில்லை. ெபாதுமக்கள் பிரச்னை தொடர்பாக கலெக்டரை சந்திப்பதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு மாலை 4 மணிக்கு வந்தேன். ஆனால், அவர் முதல்வரின் வீடியோ கான்பரன்சிங்கில் இருப்பதாக தெரிவித்தனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காத்திருந்தேன். ஆனாலும், கலெக்டரை சந்திக்க முடியவில்லை.